அர்ஜெண்டினாவில் மேலும் 9924 பேருக்கு கொரோனா – 116 பேர் பலி..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜெண்டினா 10-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அர்ஜெண்டினாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.71 லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு ஒரே நாளில் 9,924 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.71 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தாக்குதலால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 739 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3.40 லட்சத்தை தாண்டியுள்ளது.