சமூக தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – த. சத்தியமூர்த்தி!! (வீடியோ)

சமூக தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் தொற்று இலங்கையை பொறுத்தவரை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என தெரிவித்த த.சத்தியமூர்த்தி வடக்கு மாகாண மக்கள் சமூக தொற்று தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளியினைப்பேணி சமூகத் தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் த.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரேபிய நாடுகளில் இருந்து இலங்கை திரும்புவர்கள்
வடக்கு மாகாணத்தின் பல்வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ள த.சத்தியமூர்த்தி சமூகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இனங்காணப்படாத போதிலும், மக்கள் சமூகத்தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”