கொரோனாவில் இருந்து மேலும் ஒருவர் பூரண குணம்!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீட்டிற்கு இன்று (07) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,926 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 185 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை 3,123 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.