யாழில் வீதி விபத்துக்கள் காரணமாக 10 ஆண்டுகளில் 497பேர் உயிரிழப்பு.!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகள் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 24 ஆயிரத்து 327 பேர் படுகாயமடைந்துள்ளதோடு 497 பேர் மரணமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்து , விதிமுறை மீறிய பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் 24 ஆயிரத்து 327 பேர் படுகாயமடைந்துள்ளதோடு 497 பேர் மரணமடைந்துள்ளதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.
இதேநேரம் இதற்கு முந்திய 9 ஆண்டுகளான 2001 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 ஆயிரத்து 556 பேர் படுகாயமடைந்ததோடு 163பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் முதல் 10 ஆண்டுகளினை விடவும் இரண்டாம் 10 ஆண்டில் காயமடைந்தோர் எண்ணிக்கை 250 விகிதத்தினை விட அதிகமாக அதிகரித்துள்ளதோடு மரணம் அடைவோர் தொகை 280 விகிதம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”