மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை செயற்படுத்தும் உத்தியோகத்தர்களாக செயற்பட வேண்டும்!! (வீடியோ, படங்கள்)

அரச சேவையில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை செயற்படுத்தும் உத்தியோகத்தர்களாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
பட்டதாரி பயிலுநர்களாக அரசசேவையில் இணைக்கப்பட்டவர்களிற்கான பயிற்சிகள் பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ம.பிரதீபன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
பல எதிர்பார்ப்புகளோடு பட்டதாரிகளாகிய நீங்கள் அரச சேவையில் இணைந்திருக்கின்றீர்கள் ஆனால் உங்களை விட அதிக எதிர்பார்ப்புகளோடு பொதுமக்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுடைய சேவை, தேவைகளை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள்.
உண்மையாக நீங்கள் நீண்ட காலமாக பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிகளை பூரணப்படுத்தி உங்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றிருக்கின்றீர்கள் உங்களைப் போல ஒரு சிலர் தொழில் வாய்ப்பை பெறாத நிலையிலும் இருக்கிறார்கள்.
எங்களுடைய சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது அதனை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு ள்ளது ஜனாதிபதியினுடைய “சுபீட்சத்தினுடைய நோக்கு” என்ற திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்பை பெற்றிருக்கிறீர்கள் உங்களுக்கான பயிற்சி நெறிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல தலைமைத்துவம், முகாமைத்துவம் மற்றும் அரச திணைக்களங்கள் தொடர்பான விடயங்கள் ,தனியார் திணைக்களங்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் திட்டமிடல் மற்றும் கள ஆய்வு தொடர்பான விடயங்கள் தொடர்பான பயிற்சிகள் ஆரம்பமாகவிருக்கின்றது அந்த வகையிலே நீங்கள் இன்று திட்டமிடல் மற்றும் கள ஆய்வுக்கு பயிற்சிக்காக இன்றைய தினம் அமர்த்தப்பட்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய பயிற்சியின் போது உங்களது சமூகத்தில் அல்லது உடைய பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் விடயங்களை ஆராய்ந்து முடிவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் நீங்கள் அந்த அறிக்கை தொடர்பான ஒரு presentation வழங்க வேண்டும் அதனுடைய நோக்கம் இந்த அரச சேவையில் இருக்கின்ற விடயங்களை தெளிவு படுத்துவதற்காகவே, அதேவேளையில் உங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”