எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது !! (வீடியோ, படங்கள்)

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத் தடை உத்தரவை மீறியதால் கைது செய்யப்பட்ட அவர், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”