வவுனியாவில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!!!

வவுனியா பன்றிகெய்தகுளத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படும் சட்டவிரோதே துப்பாக்கிகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை (இடியன்துவக்கு) மறைத்து வைத்திருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் நான்கு சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்கப்பட்டதுடன் அதனை தமது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”