சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!!

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இலங்கையின் இறைமை சுதந்திரம் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான ஆதரவை தொடர்ந்தும் வழங்கப்போவதாக சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா உயர்மட்டக்குழுவினர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது சீன ஜனாதிபதியின் முன்னுரிமைக்குரிய விடயம் என சீன பிரதிநிதிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தனது அபிவிருத்தி முயற்சிகளில் வெற்றியடைவதற்கு சீனா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என சீன பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான இரு தரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதை சீனா முன்னுரிமைக்குரிய விடயமாகியுள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டம் உள்ளது எனவும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தேச அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டத்தினை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என சீன பிரதிநிதிகள் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!
சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!
பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!
வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!
கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!
மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!
கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!