இந்தியாவிலிருந்து பிரன்டிக்சினால் அழைத்துவரப்பட்டவர்கள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை- சுகாதார பரிசோதகர்கள் குற்றச்சாட்டு!!

இந்தியாவிலிருந்து பிரன்டிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் அழைத்துவந்தவர்களை தாங்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்டிக்ஸ் நிருவாகம் விசேட விமானங்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவந்தவர்களை எங்களின் உறுப்பினர் எவரும் கண்காணிப்பிற்கு உட்படுத்தவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட எவரும் 14 நாள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து பிரன்டிக்ஸ் நிறுவனத்தினால் அழைத்து வரப்பட்டவர்கள் அரசாங்கம்அறிவித்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள் என பிரன்டிக்சும் கொவிட் தொடர்பான செயலணியும் தெரிவித்துள்ளதை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய நிராகரித்துள்ளார்.
அவர்களை தனிமைப்படுத்தியிருந்தால் அதனை கண்காணிக்கும் நடவடிக்கையை எங்களிடம் ஒப்படைத்திருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பானவர்கள், இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் 28 நாள்தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டனர் எனதெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ள பாலசூரிய அவர்கள் எங்கு கட்டாய தனிமைப்படுத்தலிற்கு தங்களை உட்படுத்தினார்கள் என்பதையும்,யார் அங்கு காணப்பட்ட பொதுசுகாதார பரிசோதகர்கள் என்பதையும்,14 நாள் தனிமைப்படுத்தலை கண்காணித்த பொது சுகாதார பரிசோதகர்கள் யார் என்பதையும் பகிரங்கப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – இலங்கையின் வேண்டுகோளிற்கு சீனா பதில்!!
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!
சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!
பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!
வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!
கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!