இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

இலங்கையில் கொவிட் -19 கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 704 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 13ஆயிரத்து 788 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர்.இதன்படி நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக அதிகரித் துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 562 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!
389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!
கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!
நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!