கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் எந்த தரையிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள வைத்தியர் ஹேமந்த ஹேரத் பேலியகொட மீன்சந்தையிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் மீனை உண்ணுவது குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர் எனினும் நன்கு சமைத்த மீனை உண்ணுவது குறித்து மக்கள் அச்சமடையதேவையில்லை என தெரிவித்துள்ளார்.
எனினும் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் வைரஸ் எந்த தரையிலும் காணப்படலாம் என தெரிவித்துள்ள அவர் வைரஸ் மீனிலும் பொருட்களிலும் காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்களை தொட்ட பின்னர் கைகளை கழுவுவதன் மூலம் கைகளை முறையான விதத்தில் கழுவுவதன் மூலமும் வைரஸ் பரவலை தடுக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!
389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!
கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!
நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!