19 வயதுடைய இளைஞன் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது!! (படங்கள்)
யாழ்ப்பாணம் – பண்டாரக்குளப் பகுதியில் 75 மில்லி கிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மதியம் 12 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் பகுதியில் கேரோயினை மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மதுவரி உதவி ஆணையாளர் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான
மதுவரிபரிசோதகர் வி.ரசிகரன், வி.அனுஷன் ஆகியோர் கொண்ட குழு அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”