476 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!!

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு களில் சிக்கியுள்ள 476 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
டுபாயிலிருந்து 130 பேர், கட்டாரிலிருந்து 45 பேர், ஜப்பான் -நரிடாரிலிருந்து 07 பேர் கட்டு நாயக்க விமான நிலை யத்திற்கும் மற்றும் 294 பேர் மத்தளை விமான நிலையத் திற்கும் இன்று காலை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகக் கட்டு நாயக்க விமானநிலையத்திலுள்ள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.