பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய நபர் விளக்கமறியலில்!!

அட்டுலுகம பகுதியில் வைத்து பொதுச் சுகாதார பரிசோத கர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொவிட்-19 கடமை களை முன்னெடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொவிட்-19 கொரோனா தொற்றாளர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவரச் சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாக னத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப் பிடத்தக்கது.