மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனை!!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
38 வயதுடைய உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும், மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் குடும்பத்தலைவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த புதன்கிழமை எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.
இந்த நிலையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு கோரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராய்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”