சங்கானை சந்தை; கோவிட் – 19 பாதித்த 8 பேரின் வதிவிட விவரம்!!

சங்கானை பொதுச் சந்தையில் 100 வி்யாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 வியாபாரிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களின் வதிவிடங்கள் தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளன.
சங்கானை ரிசி ஒழுங்கையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரும், சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும் நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும் என சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் வடலியடைப்பைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும் சண்டிலிப்பாய் ஐயானார் கோவிலடியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும் சுதுமலை தெற்கைச் சேர்ந்த 56 வயதுடையவரும் என நான்கு பேர் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
உடுவிலைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரும் சங்கானை பொதுச் சந்தை வியாபாரியாக உள்ள நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் – ஆளுநர் சார்ள்ஸ்!!
மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)
யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!