முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள்!! (வீடியோ, படங்கள்)
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த 8 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்டுத்திருந்தனர்.
பின்னர் சில மாணவர்களால் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் ஆதரவு பெருகியதால் கடந்த 11 ஆம் திகதி, தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபி அமைப்பற்கு மாணவர்களின் பங்குபற்றலோடு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபி, அனைவருடைய பங்களிப்புடனும் மீண்டு அமைப்பதற்கு நிதி உதவியினை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய இன்றையதினம் நூபி அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
யாழ்.பல்கலைக் கழக முன்றலில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.. (வீடியோ & படங்கள்)
உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.!! (வீடியோ, படங்கள்)
திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு : த.தே.ம.முன்னணியின் அமைப்பாளர் மயூரசர்மா!!
யாழ். பல்கலைக்கழக பிரதான வாயில் உணவு தவிர்ப்புப் போராட்டம்!! (வீடியோ)
போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து செல்லாத நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!! (வீடியோ)
அரசின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது- புளொட் தலைவர் கண்டனம்
யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடைவிடாது போராட்டம் தொடர்கின்றது!! (வீடியோ, படங்கள்)
இனத்தின் அடையாளத்தை அழிப்பவர்களை!! மானத்தமிழர்கள் முறியடிப்பர்!! மயூரன்!!
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்படுகிறது!