காணிகள் உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் – நல்லூர் பிரதேச சபை தவிசாளர்!!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள் உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் உள்ள காணிகள் உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது புற்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றது குறித்த காணிகளை பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது டெங்கு நுளம்பு பரவும் நிலை காணப்படுவதாகவும், பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணி உரிமையாளர்கள் தமது காணிகளை உடனடியாக துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ப.மயூரன் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”