மேலும் 644 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (23) மேலும் 644 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 49,261 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.