இலங்கையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒருவருடம் பூர்த்தி!!

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது.
நாட்டில் கடந்த 2020 ஜனவரி 27 ஆம் திகதி சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவர் இலங்கையில் முதல் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
அத்துடன் 2020 மார்ச் 10 ஆம் திகதி 52 வயதான உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியொருவர் கொரோனா தொற்றுக் குள்ளானார்.
இந்நிலையில், 2020 மார்ச் 28 அன்று கொவிட் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் முதல் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது.
அதன்படி மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் கொவிட் தொற்றுக்குள்ளாகி அங்கொட தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கடந்த 2020 மார்ச் 20 முதல் மே 11 ஆம் திகதி வரை 52 நாட்கள் நாடு தழுவிய ரீதியில் முடக்கல் நிலையி லிருந்தது.
இந்த முடக்கல் நிலையானது ஏப்ரல் 25 ஆம் திகதி நடை பெறவிருந்த பொதுத் தேர்தலையும் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
அதன் பின்னரான காலப் பகுதியில் இலங்கை சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப் படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2020 ஒக்டோபர் 04 ஆம் திகதி மினுவாங் கொடை கொரோனா கொத்தணிப் பரவல் இலங்கையில் கொரோனா தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்தமை எம்மில் எவரும் அறிந்த விடயமே.
அத்துடன், ஒரு வருட காலப் பகுதிக்குள் நாட்டில் உறுதிப் படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக் கை 59ஆயிரத்து 922 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.