மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 20 ரூபாய் நினைவு நாணயம்!! (படங்கள்)
இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனினால் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும்.
நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”