வவுனியா நகர் முழுவதும் ”கொத்தலாவல பிரேணையை சுருட்டிக்கொள்” சுவரோட்டிகள்!! (படங்கள்)
வவுனியா நகரின் பல பகுதிகளில் இலவசக் கல்வியை சீரழிப்பதற்கான மிலிட்டரி பொறியமைப்பினை வகுக்கின்ற கொத்தலாவல பிரேணையை சுருட்டிக்கொள் என்ற வசனங்களை தாங்கிய சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இவ் சுவரோட்டிகளின் கீழ்ப்பகுதியில் கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலையம் எனவும் உரிமம் கோரப்பட்டுள்ளதுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இவ் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
வவுனியா நகரின் குறிப்பாக நூலக வீதி , ஏ9 வீதி , புகையிரத நிலைய வீதி , மன்னார் வீதி , நகர் மத்தி , ஹோரவப்போத்தானை வீதி ஆகிய பகுதிகளில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”