;
Athirady Tamil News

வடபிராந்திய பேருந்து சேவைகள் வழமையான நேர அட்டவணையில் இடம்பெறும்!!

0

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பேருந்து சேவைகள் நாளை அதிகாலை தொடக்கம் வழமையான நேர அட்டவணையில் இடம்பெறும் என்று பிராந்திய பிரதான முகாமையாளர் செல்லத்துரை குலபாலச்செல்வன் தெரிவித்தார்.

அதன்படி வடபிராந்தியத்தில் 5 மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்து சேவைகள் முன்னைய நேர அட்டவணையில் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

பயணிகள. சுகாதார நடைமுறைகளை உரியவாறு பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் செல்லத்துரை குலபாலச்செல்வன் கேட்டுள்ளார்.

இதேவேளை, தனியார் பேருந்து சேவைகளும் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு இடையேயும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.