தடுப்பூசி வேலைத்திட்டம் – தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!!!!

நாட்டில் நேற்று (08) வரை 14,684,749 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 12,255,004 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் (08) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் – 780
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 4,834
சைனோபார்ம் முதலாவது டோஸ் – 13,560
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 96,718
ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஃபைசர் முதலாவது டோஸ் – 1,162
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 23,840
மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 255
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.