வவுனியா குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலத்தில் சுகாதார நடைமுறை குறித்து திடீர் சோதனை!! (படங்கள்)
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு- குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் இன்று (21.10) திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அதிகளவிலான மக்கள் நிற்பதாகவும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அதிகளவிலான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நின்றதையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளுக்கு கோவிட் அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”