;
Athirady Tamil News

பிரதமர் மோடி 31-ந்தேதி ஸ்காட்லாந்து செல்கிறார்…!!

0

இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சர்வதேச பருவநிலை மாற்றம் மாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

இதில் உலகம் முழுவதும் இருந்து 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.

இதற்காக அவர் வருகிற 31-ந்தேதி கிளாஸ்கோ நகருக்கு செல்கிறார். இது சம்பந்தமான தகவல்கள் இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கொடுக்கப்பட்டு உள்ளன.

ஆனால் பிரதமரின் பயண திட்டங்கள் தொடர்பான முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர் லைஸ் ட்ரூஸ் இன்று டெல்லி வருகிறார். அவர் சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்திர யாதவை சந்தித்து பேசுகிறார்.

இதன்பிறகு மோடி பயணம் தொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.