குடும்ப தகராறு கோடாரி வெட்டில் முடிவு – இருவர் படுகாயம்!

இளவாலை உயரப்புலம் பகுதியில் குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த 18 வயது மற்றும் 30 வயது இளைஞர்களே கோடாரி வெட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையிலையே கோடாரி வெட்டு தாக்குதல் நடைபெற்று உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் , இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”