;
Athirady Tamil News

இந்தியாவில் 247 நாட்களில் இல்லாத அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவு…!!

0

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 3,42,73,300 ஆக உயர்ந்துள்ளது.

446 பேர் உயிரிழக்க கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை மொத்தம் 4,58,186 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 23 நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 20 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது.

14,667 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை 3,36,55,842 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 1,06,14,40,335 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.