;
Athirady Tamil News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,514 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு….!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,514 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 251 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 3,42,85,814 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,36,68,560 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,58,437 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் 1,58,817 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 248 நாட்களில் குறைந்த அளவு ஆகும்.

கோப்புப்படம்

இந்தியாவில் இதுவரை 1,06,31,24,205 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.