;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் நேற்றைய தினம் அங்குரார்ப்பணம்!! (படங்கள் வீடியோ)

0

யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வலி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ் குமாரின் நெறிப்படுத்தலில் சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் சுன்னாகம் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஒன்றியத்தில் உறுப்பினர்களாக குறித்த பகுதி சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவுசெய்யப்பட்டதோடு கொள்கை விளக்கமும் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ்குமார் எமது பிரதேசத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் கற்றல் செயற்பாட்டு உதவிகளை வழங்குவதற்கு இவ்வாறான ஒரு அமைப்பு உருவாக்கப் படுவதன் மூலம் மக்களுக்கு சேவையாற்ற முடியும் நீண்ட காலமாக இந்த ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதிலும் அது கைகூடவில்லை எனினும் இன்றைய தினத்தில் இந்த ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஒன்றியமானது பிரதேச செயலகத்தில் பதிவு பதியப்பட்ட பின்னர் வேலைத் திட்டம் ஆரம்பமாக உள்ளது அத்தோடு குறித்த ஒன்றியத்தின் மூலம் சுன்னாகம் பகுதியிலுள்ள நலிவுற்ற மக்களுக்கு புலம்பெயர்ந்துள்ளஉறவுகள் மற்றும் வர்த்தக பெருமக்களின் நிதி பங்களிப்புடன் தொடர்ச்சியாக உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளதாகவும்தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் சுன்னாகம் பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.