;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று!!!

0

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒக்டோபரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும் வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக். 31) 74 பேர் கோவிட்- 19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும் வவுனியா மாவட்டத்தில் 703 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும் மன்னார் மாவட்டத்தில் 273 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 44 பேரும் வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் கிளிநொச்சியில் 9 பேரும் முல்லைத்தீவில் 4 பேரும்
என 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 833 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.