;
Athirady Tamil News

கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு – நாளை எதிர்ப்பு போராட்டம்!!

0

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்று நாளை அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது.

கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் நாளை காலை .8.30 மணிக்கு குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே

அளவீட்டு பணிகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் காணி அளவீட்டை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.