;
Athirady Tamil News

கீரிமலை காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது!! (வீடியோ, படங்கள்)

0

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டன.

கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் இன்றைய தினம் காலை குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் அளவிட்டு பணிகளுக்காக வந்திருந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் , உத்தியோகஸ்தர்கள் திரும்பி சென்றிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.