;
Athirady Tamil News

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு!! (படங்கள்)

0

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவனியாக சென்று மகஜர் கையளித்தனர்.

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் பல்வேறுபட்ட இடர்களை ஊழியர்கள் எதிர்நோக்குவதாகவும் அஞ்சலகத்தின் நிர்வாகத்தினை உடனடியாக மாற்றுமாறு கோரி இன்றைய தினம் அதிகாலையிலிருந்து அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு நடைபவனிஆக வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலிலும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.