;
Athirady Tamil News

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!! (படங்கள்)

0

வவுனியா கோவில்புதுக்குளம் இந்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க.கனேந்திரன் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, நாடுதழுவிய ரீதியில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்களின் தரமான இலவசக் கல்வியை உறுதிப்படுத்து, மொத்த தேசிய வருமானத்தில் கல்விக்கு ஆறு வீதத்தினை ஓதுக்கு, நிறுத்தாதே நிறுத்தாதே ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே, இழிவு படுத்தாதே இழிவு படுத்தாதே ஆசிரியர் சமூகத்தை இழிவு படுத்தாதே போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

அதிபர், ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்கான கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்து நியாயமான தீர்வை வழங்க முன்வரவேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்து கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.