;
Athirady Tamil News

எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய கும்பல்…!!

0

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திடீரென வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. வதோதரா-அகமதாபாத் விரைவு சாலையில் சமர்கா கிராமம் அருகே நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில், லாரிகள், 4 கார்கள் என மொத்தம் 7 வாகனங்கள் சேதமடைந்தன. ஆனால், இந்த தாக்குதல் காரணமாக பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாலையில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.