;
Athirady Tamil News

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா: 40 பேர் பலி…!!

0

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதித்து இருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு 90 லட்சத்து 97 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 672 ஆக கூடி இருக்கிறது.

அங்கு தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9,065 ஆக உள்ளது.

இங்கிலாந்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினரில் 86 சதவீதத்தினருக்கு முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 79 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.