;
Athirady Tamil News

’அரசாங்கம் கூறும் வளங்கள் எங்கே?’

0

இலங்கையில் பாரிய எரிபொருள் மற்றும் எரிவாயு வளங்கள் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் அவ்வாறான ஒரு வளத்தை அரசாங்கத்தால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு வைப்பைக் கூட அரசாங்கம் பயன்படுத்துவதில்லை என குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் உள்ள வளங்களைப் பயன்படுத்தாமல் அதிக விலைக்கு எரிவாயு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் மின்சார மாஃபியாவுக்கு நாட்டை பலிகொடுத்து சர்வதேச மோதலில் இலங்கை தலையிடுவதாக அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.