;
Athirady Tamil News

பட்டாசு வெடிப்பதில் மோதல்- கல்லால் அடித்து ஒருவர் கொலை…!!

0

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. சிவ காலனியில் நேற்று மாலை ஏற்பட்ட இந்த மோதலின்போது கற்களை வீசி கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

இதில் 2 நபர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.