;
Athirady Tamil News

பெருந்தொகை உலர்ந்த மஞ்சள் மீட்பு!!

0

கற்பிட்டி குதிரமலை கடற்பிரதேசத்தில் சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியப் படகு ஒன்றில் இருந்து 3,408 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரின் கீழ் இயங்கும் அதிவேக கப்பல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர் குறித்த பகுதியில் நேற்று (03) விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியப் படகு ஒன்றினை கடற்படையினர் சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த இயந்திர படகில் 115 மூடைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் 3,408 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த உலர்ந்த மஞ்சள் மூடைகளை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்தனர்.

குறித்த மஞ்சள் இலங்கையின் உள்ளூர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் நோக்கில் வேறு படகுகளுக்கு மாற்றுவதற்காக இவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு, மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறினர்.

இதேவேளை, கற்பிட்டி , நுரைச்சோலை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நேற்று புதன்கிழமை (03) வரையிலான காலப்பகுதியில் 13,298 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 இந்தியர்கள் உட்பட 17 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.