;
Athirady Tamil News

பெட்ரோல் விலை குறைப்பு கண் துடைப்பு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு…!!

0

மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்த நிலையில், பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.10-ம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அதை வெறும் கண் துடைப்பு என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே விண்ணை தொட்டுவிட்ட பெட்ரோல் விலை நிலவரத்தில் இதை மத்திய அரசின் தீபாவளி பரிசு என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை. பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரி நிர்ணயத்தில் அடிப்படையான விலைக்குறைப்பு செய்வதே சரியான விலைக்குறைப்பு ஆகும். இதுபோன்ற விலைக்குறைப்பு அறிவிப்புகள் மக்களுக்கு எவ்விதத்தில் பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதற்கிடையே மேற்கு வங்காள அரசு பெட்ரோலுக்கு ரூ.5.82-ம், டீசலுக்கு ரூ.11.77-ம் குறைத்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.