;
Athirady Tamil News

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த மேலும் ஒரு ஆரம்ப பிரிவு மாணவனுக்கு கோவிட் தொற்று உறுதி!!

0

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கு கோவிட் தொற்று இன்று (05.11) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, அரசமுறிப்பு பகுதியைச் சேர்ந்த தரம் 3 மாணவன் ஒருவரின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து, மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், மாணவனுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆரம்ப பிரிவு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வவுனியாவில் 6 ஆரம்ப பிரிவு மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.