;
Athirady Tamil News

ஓமந்தை ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்வு!!

0

வவுனியா, ஓமந்தை ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

ஓமந்தையின் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கி காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு வைத்தியர்கள், கிராம மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன் வைத்து வைத்தனர்.

அதற்கமைவாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நிலக்சன் ஆகியோர் கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரைடாலில் குறித்த விடயத்தினை முன்வைத்து தமது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் ஆராய்ந்த சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், ஓமந்தை ஆரம்ப சுகாதர சேவைகள் நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். அதற்கமைவாக, குறித்த வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக தொழிற்படவுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.