;
Athirady Tamil News

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” கிளை வைத்தியசாலை வட்டுக்கோட்டையில் திறப்பு!! (படங்கள்)

0

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்று சனிக்கிழமை (06) மாலை திறந்து வைக்கப்பட்டது.

மூளாய் – கூட்டுறவு வைத்தியசாலை சங்கத்தின் தலைவர் மா.ஞானேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக வைத்தியசாலையைத் திறந்துவைத்தார்.

இந்த திறப்புவிழா நிகழ்வில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் செயலாளர் க.செல்வராசா, பொருளாளர் அ. கிருஷ்ணமூர்த்தி, வைத்திய அத்தியட்சகரும், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதியுமான வைத்திய கலாநிதி கே.சுரேந்திரகுமாரன், இருதய சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன், வைத்தியர் பி.சிறீகிருஷ்ணா, வைத்தியர் எஸ்.றஜனி, வைத்திய நிபுணர் ஏ.வீரசுதன் மற்றும் வைத்தியர் பி.யசிதரன் ஆகியோர்க லந்துகொண்டனர்.

இந்த வைத்தியசாலையில் இலவச வைத்திய சேவைகளான நீரிழிவு பரிசோதனை, இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பல பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. தினமும் காலை 7 மணி தொடக்கம் காலை 10 மணிவரை மற்றும் மாலை 4 மணி தொடக்கம் 7 மணிவரை, வைத்திய நிபுணர்கள் பலர் இணைந்து இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையின் சேவைகளில் வெளிநாடுகளில் வசிக்கும் வட்டுக்கோட்டையை சேர்ந்த பலர் உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.