;
Athirady Tamil News

மும்பையில் சோகம் – அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலி…!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையின் வடக்கில் கண்டிவாலி என்ற பகுதி உள்ளது. அங்கு ஹன்சா ஹெரிடேஜ் என்ற பெயரில் 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 14-வது மாடியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கட்டிடத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலே உயிரிழந்தனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, நேற்று மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10க்கு அதிகமானோர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.