;
Athirady Tamil News

குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு…!!

0

இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன அறையிலோ அல்லது குளிர்பதன பெட்டியிலோ வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பு மருந்தின் செயல்திறன் போய்விடும்.

ஆனால், குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

வைரசின் முனைப்பகுதியில் உள்ள புரோட்டினை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பது எளிது. கொரோனாவை உருவாக்கும் சார்ஸ் வைரஸ் மற்றும் அதன் உருமாறிய ரகங்களுக்கு எதிராக சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

அறை வெப்பநிலையிலேயே 7 நாட்கள்வரை வைத்திருந்து இதை பயன்படுத்தலாம். அதுவரை சீராகவும், செயல்திறன் மிக்கதாகவும் தடுப்பூசி இருக்கும்.

மற்ற நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்திக்கும் இந்த வழிமுறையை பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கோரி விஞ்ஞானிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருந்து நிறுவனங்களை அணுக உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.