;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதம்!!

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 908 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 987 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பழை, கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த தரவுகள் கிடைத்துள்ளன.

131 குடும்பங்களைச் சேர்ந்த 438 நபர்கள் மாத்திரமே வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.