;
Athirady Tamil News

கோவில் இரவு காவலர் கொலை: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு – போலீசார் அறிவிப்பு…!!

0

மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு காவிரி கரையோரம் அமைந்துள்ள படித்துறையில் விஸ்வநாதர் கோவிலில் கடந்த மே மாதம் 8-ந் தேதி மர்ம நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது, கோவிலில் இரவு காவலராக இருந்த சாமிநாதன் (வயது 55) என்பவர் அந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். அந்த சம்பவத்தில் காயமடைந்த சாமிநாதன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 14-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 6 மாதமாக குற்றவாளியை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவு இருந்தும் குற்றவாளி யார்? என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்தநிலையில் கோவிலில் கொள்ளையடித்து விட்டு இரவு காவலரை கொன்ற குற்றவாளி படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில் உள்ள குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டை 8778347770 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டரை 9442003309 என்ற எண்ணிலும், சப்-இன்ஸ்பெக்டரை 9498164710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.