;
Athirady Tamil News

வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர்வெட்டு!!

0

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் மாதத்தின் 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் கீழே…

* கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08
* கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை அதிகாரப்பிரிவு,
* மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை அதிகாரப்பிரிவு,

அம்பத்தலையில் இருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.