;
Athirady Tamil News

டான் ரீவியின் யாழ் கலையகத்தில் நாளை குருதிக்கொடை முகாம்!!

0

டான் தொலைக்காட்சி நிறுவன ஏற்பாட்டில் நாளை(13) குருதிக்கொடை முகாம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் யாழ் பிரதான கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதிப் பற்றாக்குறை நிலையைக் கருத்திற்கொண்டு அதற்கு உதவும் நோக்குடன் டான் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குருதிக் கொடை முகாம் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு இல. 707, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சி யாழ் கலையகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை குருதி வங்கியில் இருக்கவேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த் ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் குருதி வங்கி காணப்படுகின்றது.
இந்நிலையில் குருதி வங்கிக்கு உதவும் நோக்குடன் டான் தொலைக்காட்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த குருதிக்கொடை முகாமில் பங்கேற்று குருதிக்கொடை வழங்க விரும்பும் அனைவரையும் நாளை காலை இந்த முகாமில் பங்கேற்குமாறு டான் தொலைக்காட்சி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.